கொரோனா வைரஸ்

கொரோனா பேரிடர்: 'புதிய தலைமுறை' அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள்

kaleelrahman

சென்னை அருகே மறைமலை நகரில் கொரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சேக்கிழார் தெருவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள், காவலாளிகள், கொத்தனார்கள், தச்சர்கள் உள்ளிட்ட தரப்புகளை சேர்ந்த 25 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் கொண்ட 800 ரூபாய் மதிப்புள்ள தொகுப்புகள் 25 பேருக்கு வழங்கப்பட்டது. புதிய தலைமுறை அறக்கட்டளை செயலாளர் வெங்கடகிரி முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.