கொரோனா வைரஸ்

கோவாக்சின் செலுத்தியபின் பாராசிட்டமால் தேவையில்லை : பாரத் பயோடெக்

Sinekadhara

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பின் பாராசிட்டமால் அல்லது வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளத் தேவையில்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது சிலருக்கு காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுகிறது. அது போன்றவர்களுக்கு பாரசிட்டமால் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியபின், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளத் தேவையில்லை என்றும், அது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கப்படவில்லை என்றும் அதை தயாரிக்கும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.