கொரோனா வைரஸ்

கோவையில் நர்சிங் மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Sinekadhara

கோவையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் 46 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கோவையும் ஒன்று. அங்கு தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் 46 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக கல்லூரியில் படிக்கும் கேரள மாணவர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மேலும் 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.