கொரோனா வைரஸ்

ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய மேலும் 29 பேருக்கு கொரோனா

Sinekadhara

ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் விளையாட்டு வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் களத்தில் இருப்பவர்களும் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மேலும் 29 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382ஆக அதிகரித்துள்ளது.