கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் இன்று 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு; கோவையில் உயிரிழப்பு இல்லை

தமிழ்நாட்டில் இன்று 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு; கோவையில் உயிரிழப்பு இல்லை

Sinekadhara

தமிழ்நாட்டில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 52-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 1,40,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,21,438 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் மேலும் 36 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,454 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நேற்று உயிரிழப்பு பதிவாகாத நிலையில் இன்று 6 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் கோவை, கடலூர், ஈரோடு உள்பட 20 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதில் இணைநோய்கள் இல்லாதோர் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 31,819ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 3,104 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,56,165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.