கொரோனா வைரஸ்

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - தமிழ்நாட்டில் மேலும் 1756 பேருக்கு பாதிப்பு

EllusamyKarthik

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 164 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

2394 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

சென்னையில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று, இரு தினங்களாக அதிகரிப்பு. நேற்று முன்தினம் 122 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 164 ஆக அதிகரிப்பு. கோவையில் 164ல் இருந்து 179 ஆக அதிகரித்துள்ளது.