தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 1,668 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,59,213 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,652ஆக உள்ளது. சென்னையில் நேற்று 185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 183 ஆக குறைந்திருக்கிறது. 12 வயதுக்குட்பட்ட 101 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் இன்று 23 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,686 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 5 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 2 பேர். நேற்று ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 29ஆக இருந்த நிலையில் தற்போது 23ஆக குறைந்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 19,391ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,859 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,45,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.