கொரோனா வைரஸ்

திருவாரூர்: மாணவிகள் 16 பேருக்கு கொரோனா உறுதி - பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

Sinekadhara

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பள்ளிக்கு 7நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படித்துவந்த 12 ஆம் வகுப்பு மாணவிகள் ஐந்து பேருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகள், ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், மேலும் 11மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்தப் பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.