கொரோனா வைரஸ்

13 வது மெகா தடுப்பூசி முகாம்: 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்

kaleelrahman

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் 13 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். 80 லட்சம் இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றார்.