கொரோனா வைரஸ்

குரோம்பேட்டை போத்தீஸில் 13 ஊழியர்களுக்கு கொரோனா

Sinekadhara

சென்னை குரோம்பேட்டை போத்தீஸில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ணமஹாலில் 240 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலால் கடை மூடப்பட்டது.

நேற்று சென்னை குரோம்பேட்டையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸில் சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.