தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 27,44,037 என்று உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கும், கோவையில் 89 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 679 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பதால், தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 6,629 என்றாகியுள்ளது. அதுபோலவே இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 27,00,673 என்றாகியுள்ளது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,735 என்றாகியுள்ளது. ஒமைக்ரான் அச்சம் நிலவுவதால், கொரோனா பரிசோதனைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் (1,00,284) செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி: 'கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதல் மாநிலம்' - மா. சுப்பிரமணியன்