சினிமா

‘பள்ளியில் ஓடவிட்ட சூர்யா’ - பதிலுக்கு நான் என்ன செய்தேன் தெரியுமா?- யுவன் கலகல பேச்சு

சங்கீதா

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடனான தனது பள்ளி வாழ்க்கை குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலகலப்பாக பேசினார்.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்று வரும் ‘விருமன்’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “பள்ளியில் எனது ஹவுஸ் கேப்டன் அவர்தான், நான் சரியா யூனிஃபார்ம் இன் பண்ணிக்கொண்டு, ஷூ எல்லாம் சரியாக அணிந்துகொண்டு வரமாட்டேன். ஆனால், அப்போது பள்ளியில் எனது ஹவுஸ் கேப்டன் அவர்தான், அவர் தலையை எல்லாம் சரியாக வாரிக்கொண்டு, சரியாக யூனிஃபார்ம் அணிந்துக்கொண்டு வருவார். நான் சரியாக இல்லாததால் அவுட் என்பார். சரின்னு போவேன். ஆனால் பள்ளியின் பெரிய மைதானத்தை 3 முறை சுற்றவைப்பார்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

இடையில் மறித்துப் பேசிய சூர்யா, அதுக்காகத்தான் இப்போது பாடல் வைத்து என்னை யுவன் ஆட வைக்கிறார் என்று சொன்னார். இதையடுத்து பேசிய யுவன், செனோரீட்டா உள்ளிட்ட பல பாடல்களை கொடுத்து, அப்போ ஆடுங்க எனக் கூறினேன். அப்போ என்னை ஓடவிட்டல்ல, இப்போ உன்னை ஓடவிடுகிறேன் பார் என்ற அளவில் ஆடவிட்டேன்” இவ்வாறு தெரிவித்தார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது.