சினிமா

‘நீ யாரு’...விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தின் டீசர் வெளியீடு!

‘நீ யாரு’...விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தின் டீசர் வெளியீடு!

sharpana

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’  படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்டோர் நடத்துள்ளனர்.

இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் விஜய் சேதுபதி வெளிநாடு வாழ் தமிழராக வருகிறார். ‘நீ யாரு’ என்ற கேள்வியே அதிகம் இடம்பிடிக்கிறது. ஏற்கனவே, இப்படம் சர்வதேச பிரச்சனைக் குறித்து பேசப்போகிறது என்று கூறப்படுகிறது. வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகுறித்து படம் பேசுகிறது என்பதை டீசர் தெளிவாக உணர்த்துகிறது.