சினிமா

"எங்கள் குடும்பத்திற்கே கொரோனா பாசிடிவ்" ராஜமவுலி ட்வீட் !

jagadeesh

கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டாலும் எங்கள் குடும்பத்தினர் நலமுடன் இருக்கிறார்கள் என்று இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"மகதீரா", "நான் ஈ", பாகுபலி திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த திரைப்பட இயக்குநர் ராஜமவுலி. இப்போது "ஆர்ஆர்ஆர்" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் இவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இந்நிலையில் ராஜமவுலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில் "கடந்த சில நாள்களுக்கு முன்பு எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் லேசான கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுறுத்தல் பெயரில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டோம்" என தெரிவித்துள்ளார்.

மேலும் "நாங்கள் எல்லோரும் நலமுடன் இருக்கிறோம். அறிகுறி இல்லாத பாதிப்பே இருக்கிறது. உடலில் கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு சக்திக்காக காத்திருக்கிறோம். முடிந்ததும் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.