சினிமா

மும்பைக்கு சென்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவாய் என்றார்கள்- ராதிகா ஆப்தே

Veeramani

நான் சினிமாவில் நடிப்பதற்காக புனேவில் இருந்து மும்பைக்கு வந்தபோது பலரும் மும்பைக்கு சென்றால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவாய் என்றார்கள் என கூறியுள்ளார் பிரபல நடிகை ராதிகா ஆப்தே.

இது தொடர்பாக பேசிய ராதிகா ஆப்தே “புனேவில் இருந்து மும்பைக்கு சென்றால் பாலியல் வன்முறைக்கு ஆளாவாய், அதுதான் சினிமாவில் நடக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். திரைத்துறையில் என்ன நடக்கிறது என்பது பற்றி  பயங்கரமான உணர்வுகள் அவர்களிடம் உள்ளது. இந்த விசயத்தின் தீவிரத்தன்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால் இங்கு அனைவருமே மனிதர்கள்தான் என்பதை உணரவேண்டும். வாழ்வை இயல்பாக்கவேண்டும்” என்று கூறினார்