சினிமா

நாட்டுப்புற கலைஞர்களுடன் சமபந்தி விருந்தில் விஷால்..!

Rasus

சண்டக்கோழி படப்பிடிப்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சமபந்தி விருந்து அளித்த விஷால், அவர்களுடன் நடனமாடி அசத்தினார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ஆகியோர் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் சண்டக்கோழி. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்போது விஷால் நடிப்பில் 'சண்டக்கோழி 2' தயாராகி வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சண்டக்கோழி-2 படப்பிடிப்பில் மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 40 நாட்களாக பங்கேற்றனர். அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, படப்பிடிப்பில் கலந்துகொண்ட நாட்புப்புற கலைஞர்களுக்கு விஷால் சமபந்தி விருந்து அளித்தார். அப்போது அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து விஷால் உணவு அருந்தினார். அதனைத்தொடந்து நாட்டுபுற கலைஞர்களுடன் நடனமாடி விஷால் அசத்தினார்.