சினிமா

விஷாலின் 31-வது படத்தை ஆகஸ்ட் 15-க்குள் முடிக்க திட்டம்

Sinekadhara

விஷால் நடித்து வரும் அவருடைய 31-வது திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

து.ப.சரவணன் என்பவர் இயக்கும் முதல் படத்தில் விஷால் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் வகையில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர், விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

மேலும் அதை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை முடித்தவுடன் தன்னுடைய 32-வது படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க உள்ளார் விஷால். அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்குகிறார்.