விநாயகன்
விநாயகன் புதிய தலைமுறை
சினிமா

காவல் நிலையத்தில் புகை பிடித்த "ஜெயிலர்" வில்லன் விநாயகன்?

PT WEB

கேரளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இருவரையும் சமரசம் செய்து வைப்பதற்காக நடிகர் விநாயகன் வீட்டிற்கு எர்ணாகுளம் காவல்துறையினர் சென்றுள்ளனர். பின்னர் இருவரிடமும் பேசி வாக்குமூலம் பெற்றதாகத் தெரிகிறது.

#BREAKING | ஜெயிலர், துருவ நட்சத்திரம் பட நடிகர் விநாயகன் கைது

இந்தநிலையில் காவல்துறையினரின் விசாரணையில் திருப்தியடையாத நடிகர் விநாயகன் மீண்டும் காவல்நிலையம் சென்று விசாரணை நடத்திய பெண் அதிகாரி யார் எனக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் காவல்நிலையத்தில் புகைப்பிடித்ததால் அதே இடத்தில் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல் துணை ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் நடிகர் விநாயகன் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகர் விநாயகனைக் கைது செய்தனர். பின்னர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் நடிகர் விநாயகன் மது அருந்தியது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து அவரை பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.