வருமான வரித்துறை முன்பு ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் விஜய் அவகாசம் கோரியுள்ளார். முன்னதாக நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன் அனுப்பியருந்தது.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது. ஆனால் அவர் வீட்டிலிருந்து ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. பின்னர் வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தனக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வேண்டுமென்று விஜய் கோரியுள்ளார்.