சினிமா

இயக்குநராக அவதாரமெடுக்கும் வரலட்சுமி சரத்குமார்?

Veeramani

நடிகை வரலட்சுமி சரத்குமார், “கண்ணாமூச்சி” என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது கண்ணாமூச்சி என்ற திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் பெண்களுக்கான உரிமைகளை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்டர்களை நேற்று ட்விட்டரில் வெளியிட்ட நடிகை லஷ்மி மஞ்சு உடனடியாக அந்த ட்வீட்டை நீக்கினார். விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போஸ்டர் மூலமாக இது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசும் படம் என்று தகவல்கள் தெரிவிகின்றன.