நடிகை வரலட்சுமி தற்போது இசை, நடன வடிவ நாடகம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோமியோ ஜூலியட் கதையைத் தழுவி, ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களின் தொகுப்போடு உருவாக இருக்கும் இந்த நாடகம் வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் அரங்கேறவிருக்கிறது. சால்சா மணி உள்ளிட்ட பிரபல நடனக் கலைஞர்களோடு தயாராகி வரும் இந்த நாடகத்தின் தயாரிப்பாளர் வரலட்சுமி இந்த நாடகத்தில் ஜூலியட் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.