பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் துளியளவும் கிராஃபிக்ஸை பயன்படுத்தக்கூடாது என முடிவெடுத்திருக்கிறாராம் ராஜமவுலி. இந்தப்படத்திற்காக ஹைதராபாத்தில் செட்டுகளை அமைத்து வருகிறார்கள்.
எல்லாம் சரி, ஹீரோ யார்? ஜூனியர் என்.டி.ஆரை இயக்குகிறார் ராஜமவுலி. இந்த காம்பினேசன் ஹிட்டாகும் என அடித்துக் கூறுகிறது டோலிவுட் வட்டாரம். இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, ‘புதிய படத்திற்கான கதையின் இறுதிவடிவத்தை ரோமானியாவில் எழுதி வருகிறார் ராஜமவுலி. அடுத்த மாதம் வரும் ஊருக்கு வரும் அவர் படப்பிடிப்பை விரைவில் துவங்க இருக்கிறார் எனக் கூறுகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்கப்போவது இதே ஜூனியர் என்.டி.ஆர்தான் என்பது கூடுதல் செய்தி.