சினிமா

அடுத்தடுத்த நாளில் சூர்யா, பிரபாஸ் படங்களை வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்

அடுத்தடுத்த நாளில் சூர்யா, பிரபாஸ் படங்களை வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்

சங்கீதா

அடுத்தடுத்த நாட்களில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக மட்டுமின்றி, நடிகராகவும் இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மேலும், இவர் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம், படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில், விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்.’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

இதில், விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்.’ படம் பிப்ரவரி 11-ம் தேதி வெளிவருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இந்நிலையில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து பிரம்மாண்டாக உருவாகியுள்ளது ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம்.

இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்தநிலையில், கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு வந்துகொண்டிருந்தது. தற்போது உலகம் முழுவதும் வரும் மார்ச் 11-ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. ஒரேநாள் இடைவெளியில் ‘எதற்கும் துணிந்தவன்’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய 2 மாஸ் ஹீரோக்களின் படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதனால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுவதுடன், வசூல் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.  காதலுக்கும், விதிக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு, விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அவரது காதலியாக மருத்துவர் பிரேர்னா எனும் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.