தமிழ் சினிமாவில் நயன்தாரா போன்று வலம்வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே பொழுதைக் கழித்து வருகிறாராம் திரிஷா.
முன்னணி நடிகையாக இருந்தும் நயன் வாங்கும் சம்பளத்தை விட குறைவாகவே தனக்கு சம்பளம் கிடைப்பதாக ஃபீல் பண்ணும் திரிஷா, இதற்காக சில அதிரடி நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள். நயனைப் போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் கவனம் செலுத்தவும், நல்ல கதையம்சம் கொண்ட படத்தினை தேர்வு செய்வதிலும் எச்சரிக்கையாக இருக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இரண்டு படங்கள் ஹிட் கொடுத்துவிட்டு நயனைப் போலவே சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தும் முடிவில் இருக்கும் திரிஷா, அதற்காக தான் நடிக்கும் படத்தின் இயக்குனர்களை அழைத்து சில கண்டிஷன்களையும் போட்டுள்ளதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலவுகிறது.