சினிமா

’ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம்" - எச்சரிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்

Sinekadhara

ஓடிடியில் வெளியிடுவதாக இருந்தால் தமிழகத்தில் ’ஈஸ்வரன்’ படத்தை வெளியிடமாட்டோம் என்று திரையரங்குகள் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

சிலம்பரசன் நடித்துள்ள’ ஈஸ்வரன்’ திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் ’ஈஸ்வரன்’ படம் வெளியாகும் என படக்குழு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இவ்வாறு கூறியிருக்கின்றனர்.

ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ’ஈஸ்வரன்’ படத்திற்கு ஒத்துழைப்பு கூடாது எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.