சினிமா

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

sharpana

நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுரேஷ் சங்கையா. விதார்த், ரவீனா நடிப்பில் வெளியான படம் விமர்சன ரீதியாக வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்தது. மனித உயிர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கவனம் ஈர்த்தார் சுரேஷ் சங்கையா. பலராலும் பாரட்டப்பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து சுரேஷ் சங்கையா நடிகர் பிரேம்ஜியை வைத்து ‘சத்திய சோதனை’ படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், காமெடி நடிகர் செந்திலை தனது அடுத்தப் அப்டத்தில் ஹீரோவாக்கி இருக்கிறார், சுரேஷ் சங்கையா. ’சத்திய சோதனை’ படத்தை தயாரித்த சமீரா பரத்ராம்தான் இப்படத்தையும் தயாரித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கிய இப்படத்தினை தொடங்கிய வேகத்திலேயே முடித்திருக்கிறது படக்குழு. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.