’தலைவி’ படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கி முடித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள்.தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23-ஆம் தேதி ’தலைவி’ வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, பின்பு கொரோனாவால் படத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று விளக்கம் கொடுத்தது.
இந்த நிலையில், ‘தலைவி’ ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தயாரிப்பாளர் இன்னும் வெளியீட்டுத் தேதியை இறுதி செய்யவில்லை.படம் ஓடிடியில் வெளியாகிறது என்ற செய்தியை யாரும் நம்பவேண்டாம்.நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் தியேட்டரில்தான் ‘தலைவி’ வெளியாகும்” என்று அப்டேட் கொடுத்திருக்கிறார்.