விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான `தலைவன் தலைவி' மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இவர் அடுத்ததாக மிஷ்கின் இயக்கியுள்ள `ட்ரெயின்', பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள `Slum Dog: 33 Temple Road' படங்களில் நடித்து முடித்திருக்கிறார். வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் `அரசன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கடுத்து இவர் நடிக்கும் படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படம் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது அதனை விஜய் சேதுபதியை பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் "நான் ஏற்கனவே 2018ல் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் மணி சாருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்த முறை நாங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை செய்வது எனக்கு மரணத்தை போன்றது. நான் ரீமேக்கோ, சீக்குவலோ எப்போதும் செய்ய மாட்டேன். கலை உலகை ஒன்றிணைக்கிறது. நான் அந்த உலகின் ஒரு சிறிய பகுதி. நான் எந்த உத்தியையும் பின்பற்றுவதில்லை. என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதில் எனக்கு கட்டுப்பாடு உண்டு என நம்புவேன், ஆனால் நாம் வாழ்க்கையில் எதையும் கட்டுப்படுத்த மாட்டோம்.
நான் எதையும் திட்டமிடுவதில்லை. என் நடிப்பில் கூட ஒரு நீரோட்டம் போல செல்ல விரும்புகிறேன். திரையில் வேறொருவராக மாறுவது எளிதானது அல்ல. சிறிய வேடங்களைத் தேடித் திரைத்துறையில் நுழைந்த விஜய் சேதுபதி இன்னும் உயிருடன் இருக்கிறார். மணிரத்னத்துடன் பணிபுரிந்தாலும் அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். நான் சினிமாவுக்கு வந்தபோது நான் செய்ய விரும்பியது, கேமரா முன் நின்று என் வசனங்களைச் சொல்வதைதான். இன்றும் கூட, நான் கேமரா முன் இருக்கும்போது மிகவும் உயிர்ப்போடு உணர்கிறேன்.