தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, ஜூன் 10ஆம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த ஊரான அல்லி நகரத்தில் அவரது உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடம் சென்றது குறித்து இன்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "இமயத்தைப் புதைத்த இடம் இதுதான். தூங்கு ராஜா தூங்கு ஓடி ஓடிக் களைத்தவனே, கலையாத உறக்கத்தில் கனவுகளற்ற உறக்கத்தில் ஓய்வுகொள். மண்ணை இழுத்துப் போர்த்துப் படுத்திருக்கும் உன்னைக்
குளிரோ, மழையோ, வெயிலோ, புயலோ ஒன்றும் செய்யாது. நலம் கேட்க வந்த நான், நல்ல செய்தி கொண்டுவரவில்லை. இதே இடத்தில் என்னோடு நின்று இறுதி மரியாதை செலுத்திய உன் சீடன், உனைத்தேடி வந்துவிட்டான். ஜோடிக் குதிரைகளை இழந்து கவிழ்ந்து கிடக்கிறது கலைத்தேர். கடமை இருக்கிறது. இந்த மண்ணகத்தில் உனக்கொரு மணிமண்டபம்; அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன். முதலமைச்சர் விஜயைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன். இந்த இடம், கலைக்கோயிலாக என்று கட்டப்படுமோ அன்று தேனி மாவட்டம் முழுக்க தேவர்கள் பூச்சொரிவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.