தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பல முன்னணி நடிகர்களோடு நடித்தார். பின்னர் உடல்நல பாதிப்புகள் காரணமாக சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. இந்த நிலையில், தன்னுடைய பலவீனமான உடலை தயார்செய்து மீண்டது குறித்து பல பேட்டிகளில் சமந்தா கூறியுள்ளார்.
ஆனால், முதல்முறையாக தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து நெகிழ்ச்சியான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். இனிமேல் மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அந்த வகையான அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் பலவீனமாக இருந்தேன். மேலும், அதன்மூலமாகதான் நான் மேம்பட்ட நபராக இந்த உறவில் இருக்கிறேன். அதற்குக் காரணம் ராஜ் என்ற மனிதர். சில நாட்களுக்கு முன்பு, நான் ஒரு பழைய தோழியைச் சந்தித்தேன், பின்னர் அவள் எனக்கு, ‘பெரிய இடைவெளிக்குப் பிறகு முதல்முறையாக சிரமமில்லாமல் நீங்கள் சுவாசிக்கிறீர்கள் என எனக்கு தோன்றியது' என ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள். எனவே இனி நான் நடிக்க தேவை இல்லை" எனக் கூறியுள்ளார் சமந்தா.