இயக்குனர் விக்ரம் சுகுமாரன் முகநூல்
கோலிவுட் செய்திகள்

’மதயானைக்கூட்டம்’ பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்ரம் சுகுமாரன் நேற்று நள்ளிரவில் காலமானார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர் . இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 1999 ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை உதவியாளராக பணிபுரிந்துள்ளர். வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராகவும் அறிமுகம் ஆனார். சசிகுமார் நடித்த 'கொடிவீரன்' படத்திலும் விக்ரம் சுகுமாரன் நடித்துள்ளார்.

ஆடுகளம் படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் எழுதினார். இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதனையடுத்து, நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு, ‘ இராவணக்கோட்டம்’ படத்தை இயக்கினார்.

இந்த நிலையில்தான், நேற்று நள்ளிரவு நெஞ்வலி ஏற்பட்டு மரணமடைந்தார்.

மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது நெஞ்சுவலி வர மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ளனர். இந்நிலையில், மதுரையிலிருந்து சென்னைக்கு அவரது உடல் கொண்டு வரப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரது இறப்பிற்கு திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.