லியோ விஜய்
லியோ விஜய் PT Desk
கோலிவுட் செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிர்ந்த ‘தலைவா’ முழக்கம்.. ஆந்திராவில் விஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள்!

சங்கீதா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இடைவிடாமல் கடந்த ஜனவரி மாதம் முதல் சென்னை, கொடைக்கானல், காஷ்மீர் என்று ‘லியோ’ படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், காஷ்மீரைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி அருகில் உள்ள தலகோனா அருவி பகுதியில் ‘லியோ’ படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

லியோ

அப்பகுதிக்கு விஜய் வந்துள்ளதை அறிந்த ஆந்திர மாநில விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். ‘தலைவா, தலைவா’ என்று மகிழ்ச்சியுடன் கத்தி கூச்சலிட்ட நிலையில், விஜய் அவர்களை பார்த்து கையசைத்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யின் 67-வது படமாக தயாராகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியுடன் முடிவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது.