சினிமா

படத் தலைப்புக்கான விண்ணப்பங்கள்: சுஷாந்த், விகாஷ் துபே தொடர்பான பெயர்களுக்கு ஆர்வம்!

webteam

படத் தலைப்புக்காக சுஷாந்த் தொடர்பான பெயர்களை பதிவு செய்ய விண்ணப்பங்கள் அதிகளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏதேனும் ஒரு நிகழ்வு நாட்டையே சில நாட்கள் பரபரப்பாக வைத்திருந்தது என்றால் அதன் மீது மக்களுக்கு ஆர்வர் இருப்பதாக அர்த்தம். அதனால் தான் எதாவது பரபரப்பான நிகழ்வுகள், மர்மங்கள், மர்மமான உயிரிழப்புகள் எல்லாவற்றையும் சினிமாவாக எடுக்க படைப்பாளர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக பாலிவுட் உலகம் பயோகிரோபி எடுப்பது, உண்மை நிகழ்வுகளை திரைப்படங்களாக எடுக்க ஆர்வம் காட்டும். தற்போது வெப் சீரிஸ் அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற கதைகளுக்கு அதிக வரவேற்பு காட்டப்படுகிறது.

அந்தவகையில் பாலிவுட்டை பரபரப்பாக்கிய சுஷாந்தின் மரணம் மீது தற்போது பாலிவுட் உலகம் கவனத்தை திருப்பியுள்ளது. ஏற்கெனவே சுஷாந்தின் பயோகிராபி எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் டிக் டாக் பிரபலம் ஒருவரும் அதில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் படத்தலைப்புக்காக சுஷாந்த் தொடர்பான பெயர்களை பதிவு செய்ய விண்ணப்பங்கள் அதிகளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த், சுஷாந்த் சிங் ராஜ்புட் - பயோகிராபி, தி அன்சால்வ்டு மர்டர் மைஸ்ட்ரி- ராஜ்புட் போன்ற தலைப்புகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பாலிவுட் சினிமாத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் உபியில் பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி விகாஷ் துபேவின் பெயர் தொடர்பாகவும் இரண்டு விண்ணப்பங்கள் வந்ததாகவும் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.