‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு பின் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த் கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்து கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி, அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.சூர்யா – செல்வராகவன் இணையும் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தகவலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படும் என்றும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.