சினிமா

ராம்சரண் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘RC15’ படத்தின் டைட்டில் இதுவா? - வெளியான தகவல்

webteam

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரணின் 15 ஆவது படமாக உருவாகி வரும் ‘ஆர்.சி. 15’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளதாகல் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.சி. 15’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இதில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு CEO - Chief electoral office என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 27-ம் தேதி படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.