ஜேஎன்யூ விவகாரத்தில் குரல் கொடுத்த நடிகை தீபிகா படுகோனுக்கு சக நடிகையான சோனாக்ஷி சின்கா பாராட்டுகள் தெரிவித்துள்ளார்
ஜேஎன்யூ வளாகத்தில் நடைபெற்ற கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஜேஎன்யூ வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன், மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.
தீபிகாவின் ஆதரவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனுக்கு சக நடிகையான சோனாக்ஷி சின்கா பாராட்டுகள் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''நீங்கள் எந்தக்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.
நீங்கள் வன்முறையை ஆதரிக்கிறீர்களா? ரத்தம் வழியும் மாணவர்கள், பேராசிரியர்களின் முகங்கள் உங்களை உலுக்கவில்லையா? நாம் நீண்டகாலம் அமைதியாகவே இருக்க முடியாது. இது அமைதியாக இருப்பதற்கான நேரம் அல்ல. எதிர்த்து குரல் கொடுத்த தீபிகா படுகோனுக்கும் மற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள்'' என தெரிவித்துள்ளார்