சினிமா

"பாடகர் எஸ்பிபி நலமுடன் இருக்கிறார்"- மருத்துவமனை அறிக்கை !

jagadeesh

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வீடியோ வெளியிட்டு இருந்த பிரபல பாடகர் எஸ்பிபி “எனக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் மிகவும் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் நான் மருத்துவமனையிலேயே அனுமதி ஆகியுள்ளேன். சளி, காய்ச்சலை தவிர மற்றபடி நான் நன்றாக உள்ளேன். நான் ஓய்வு எடுப்பதால் நிறைய கால்கள் எடுக்கமுடியவில்லை. நான் நலமாக இருக்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. அதில், கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை மையத்தில் சேர்ந்த அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது கண்காணித்து வருகிறது. அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் நலம் பெற வேண்டும் என விரும்பிய மற்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்” என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.