சினிமா

கொரோனா பேரிடர்: 200 இசைக்கலைஞர்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய பாடகர் மனோ

sharpana

கொரோனா இரண்டாவது அலை பரவலால் பாதிக்கப்பட்ட இசைக் கலைஞர்களுக்கு பாடகர் மனோ மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாதான். இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு துறைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. அதில், சினிமா துறையும் ஒன்று. இதனால், சினிமாவின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன. 

இந்த நிலையில், தென்னிந்தியாவின் முன்னணி பாடகரான மனோ, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 200 இசைக்கலைஞர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை இன்று வழங்கினார். பயணாளிகள் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.