சினிமா

‘என் மகளிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்’ - நடிகர் சரத்குமார்

webteam

நடிகர் சரத்குமார் அவரது மகள் வரலக்ஷ்மியிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகை வரலக்ஷ்மியின் தந்தை சரத்குமார். இவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவரது மகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார். பேட்டியாளர் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சரத்குமார், “எனது மகள் சினிமா துறையில் நுழைவதற்கும் அவரது வளர்ச்சிக்கும் நான் ஒன்றுமே செய்யவில்லை. சொந்த முயற்சியில் அவரே தன்னை வளர்ந்து கொண்டார். அவரது முதல் படம் ‘போடா போடி’ வெளிவர நான் உதவவே இல்லை. ஆகவே அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் தைரியமானவர். மேலும் சக்தி நிறைந்தவர். அவரே தன் திறமையால் தன்னை முன்னேற்றி கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

சரத்குமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகையும் அவரது மனைவியுமான ராதிகாவுடன் சேர்ந்து ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடிப்பதை பற்றி பேசியுள்ளார். ஆனால் அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் என்ன பாத்திரத்தில் நடிக்கிறார்? என்ன கதை என்பது குறித்து அவர் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

மேலும் அவரது மகள் வரலக்ஷ்மி சரத்குமாருடன் இணைந்து முதன்முறையாக ‘பிறந்தாள் பராசக்தி’ படத்தில் நடிக்கிறார். அதில் ராதிகாவும் நடிக்கிறார். இந்தக் கதையை கேட்டவுடன் இதில் சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து நடித்தால் சரியாக இருக்கும் என்று இயக்குநர் ஒ எம் விஜயிடம் பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.