சென்னை வானகரம் அருகே சாலைகள் மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்த காரணத்தால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சாலைகள் சேதமடைந்துள்ளது. வானகரம் பகுதியில் சாலைகள் பெருத்த சேதம் அடைந்துள்ளது. இதனால், கனரக வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன.