சினிமா

அமலா பாலின் வாய்ப்பை பறித்த ஓகி புயல்!

webteam

அமலா பாலை நீக்கிவிட்டு பிரியா ஆனந்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூ விளக்கம் அளித்தார்.

மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், ’காயங்குளம் கொச்சுன்னி’ என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார். உண்மைக் கதையை அடிப்படையாக கொண்ட பீரியட் படமான இதில், நிவின் பாலி ஹீரோ. அமலா பால் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் அவர் மாற்றப்பட்டு பிரியா ஆனந்த் நடிக்கிறார். 

இதுபற்றி இயக்குனர் ஆண்ட்ரூஸ் கூறும்போது, ’சமீபத்தில் பெய்த ஓகி புயல் காரணமாக படத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதாகிவிட்டது. புயல் தொடங்கியதால் ஷூட்டிங் நாட்களை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம். அமலா பால் மற்ற மொழிகளிலும் பிசியாக நடிப்பதால் தேதிகளை எங்களுக்கு மீண்டும் ஒதுக்க முடியவில்லை. இதனால் படத்தில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து பிரியா ஆனந்த்தை ஒப்பந்தம் செய்துள்ளோம்’ என்றார்.

பிரியா ஆனந்த் கூறும்போது, ’பீரியட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. கதைக்காக, 3 படங்களை விட்டுவிட்டு இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.