சினிமா

விட்டதை பிடிக்க துடிக்கும் நெல்சன்? ரஜினி 169 தகவலால் எகிறும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு

JananiGovindhan

பீஸ்ட் படம் வெளியான கையோடு நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அதுவும் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் இந்த படம் தற்காலிகமாக ரஜினி169 என அழைக்கப்பட்டு வருகிறது. அறிவிப்பு வெளியாகும் போதே அனிருத்தான் ரஜினி 169க்கு இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து எந்த அப்டேட்டும் தயாரிப்பு நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இப்படி இருக்கையில், ரஜினி 169ல் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் தனது கால்ஷீட்டையும் ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ரஜினி 169ல் வில்லனாக கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறாராம். இது தொடர்பாக பெங்களூருவில் நடந்த படவிழா ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு சிரித்த முகத்துடன் சிவராஜ் குமார் கடந்து சென்றிருக்கிறார். இதனால் ரஜினி 169ல் சிவராஜ்குமார் இருப்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

இதுபோக, 2023ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் படபிடிப்புகள் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளது. மேலும் பீஸ்ட் படத்தில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டதால் அங்கு விட்டதை இங்கும் பிடிக்கும் வகையில் ரஜினி 169ல் அதிக கவனம் செலுத்துகிறாராம். இதுபோக, தமிழ் சினிமாவின் சூப்பர் டூப்பர் ஹிட் இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரின் பங்கும் திரைக்கதையில் இருக்கப்போவதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் ரஜினி 169 வெறும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மட்டும் இருக்காது என்பதை இந்த தகவல்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ALSO READ: