சினிமா

ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடிக்கு இன்று திருமணம்? - கசியும் தகவல்

ச. முத்துகிருஷ்ணன்

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்.

பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அப்போதே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இருவரது வீட்டிலும், இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்ட, இன்று திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் இல்லம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதியெங்கும் நட்சத்திரங்கள் இறங்கி வந்தது போல ஜொலித்த மின் விளக்கு அலங்காரங்களை அப்பகுதி மக்கள் வெகுவாக ரசித்தனர். ரிஷி கபூர் மற்றும் நீத்து கபூர் ஆகியோரின் திருமணம் போல ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் திருமணமும் செம்பூரில் உள்ள ஆர்கே இல்லத்தில் நடைபெற இருக்கிறது.

ஆலியாவின் தாய்வழி தாத்தாவான என்.ரஸ்தான் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தான் இறப்பதற்குள் ஆலியா மற்றும் ரன்பீரின் திருமணத்தை பார்க்க வேண்டுமென மிகுந்த ஆசையில் அவர் நினைப்பதாகவும் அவரின் உடல்நிலை கருதியே இவர்களின் திருமணத்தை எளிய முறையில் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.