சினிமா

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் கெளதம் மேனன்?

webteam

ரஜினி அடுத்ததாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி உள்ள ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பின் வேலைகள் முடிந்து, இப்போது அப்படத்திற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படம் வரும் ஆண்டு பொங்கர்ல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. அதனை அடுத்து அவர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தினை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் படப்பிடிப்பு ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதனை படக்குழு இதுவரை உறுதி செய்யவில்லை. 

இந்நிலையில், இப்போது ரஜினியின் ‘தலைவர் 169’ படம் குறித்த தகவகள் கசிந்து வருகின்றன. இப்படத்தை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக செய்தி பரவி வருகிறது. இதற்கான கதையை ரஜினியிடம் அவர் விவரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கதையில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. கெளதம் இயக்கப் போகும் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இந்நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.