ரஜினியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரினர். அந்த வழக்கு கடந்த மாதம் 23ம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் ஆஜரான சவுந்தர்யாவும், அஸ்வினும் பிரிந்து வாழும் முடிவில் மாற்றமில்லை என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை ஏற்று ரஜினி மகள் சவுந்தர்யா அஸ்வின் இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.