சினிமா

மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

sharpana

அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கிடப்பில் போட்டிருந்த நிலையில், வரும் 12-ஆம் தேதி காலை மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவி வந்த சூழலில், தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கிடப்பில் போடுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர்.

இந்நிலையில் வரும் 12-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளார். மாவட்டச் செயலாளர்களை மட்டும் சென்னைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.