தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர்கள், அவருக்காக பறவை காவடி எடுக்கும் விழா நடத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி தனது 67-வது பிறந்தநாளை டிசம்பர் 12-ம் தேதி கொண்டாட உள்ளார். மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டத்தை ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாட இப்போதே தயாராகிவிட்டனர். பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இந்தநிலையில், ஆண்டிபட்டியைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள், அவருக்காக பறவை காவடி எடுத்தனர். இந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழவும், அரசியலில் வெற்றி பெறவும் இந்த காவடி எடுக்கும் விழா நடைபெற்றதாக அவர்கள் கூறினர்.