சினிமா

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா”

webteam

நடிகர் ராகவா லாரன்ஸின் அடுத்த படத்திற்கு “கால பைரவா” என தலைப்பிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

மாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் படம் முனி 4. அதாவது காஞ்சனா 3. இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிக பிரமாண்டமாக “கால பைரவா” படத்தின் வேலைகளை தொடங்க இருக்கிறார் இதைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ் அது பற்றிய தகவல்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கதில் ராகவா லாரன்ஸ், “நண்பர்களே! மற்றும் என் ரசிகர்களே.. நான் உங்களின் வாழ்த்துகளையும் ஆதரவையும் என் அடுத்த படமாக “கால பைரவா” வுக்கும் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.