சினிமா

வெளிநாடுகளில் தியேட்டரில் வெளியாகிறது ராகவா லாரன்ஸின் ‘லக்‌ஷ்மி பாம்’

sharpana

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது. சமூகத்தினரால் ஒதுக்கப்படும் திருநங்கைகள் படும் கஷ்டத்தையும் புறக்கணிப்புகளையும் சரத்குமார் திருநங்கையாக நடித்து மக்கள் மனங்களை மாற்றியிருப்பார்.

தமிழில் வெற்றிப் பெற்ற இப்படத்தை இந்தியில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார், கியாரா அதிவானி நடிக்க இயக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தியேட்டர்கள் இன்னும் திறக்கவில்லை. அதனால், ஓடிடியில் வெளியிடுகிறார்கள். ஆனால், லக்‌ஷ்மி பாம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு நாடுகளில்  நவம்பர் 9 அன்று தியேர்களில் வெளியாகவுள்ளது.  இதனால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பெரும் ஆவலில் உள்ளார்கள்.