சினிமா

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.01 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

sharpana

கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவ, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பல துறையினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது குடும்பத்தினருடன் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து 1 கோடியே 1 லட்சத்திற்கான நிதியுதவியை அளித்துள்ளார்.